PG TRB - தமிழ் - தேர்வு 3
1. பிரிகெல் என்னும் ஐரோப்பியர் எந்தத் திராவிட மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் எழுதினார்.
அ) துளு
ஆ) குடகு
இ) கோண்டா
ஈ) தோடா
2. இந்தியநாடு மொழிகளின் காட்சிச்சலையாகத் திகழ்கிறது என்றவர்
அ) ஹீராஸ் பாதிரியார்
ஆ) தெ.பொ.மீ
இ) ச.அகத்தியலிங்கம்
ஈ) கால்டுவெல்
3. திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
அ) தொல்காப்பியர்
ஆ) இளங்கோவடிகள்
இ) திருநாவுக்கரசர்
ஈ) குமாரிலபட்டர்
4. தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் உருவானது
என்றவர்
அ) கால்டுவெல்
ஆ) ஹீராஸ் பாதிரியார்
இ) மாக்ஸ் முல்லர்
ஈ) ரைஸ்டேவிஸ்
5. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் கால்டுவெல் என்பவரால்
எழுதப்பட்ட ஆண்டு
அ) 1856
ஆ) 1857
இ) 1858
ஈ) 1859
6. தற்போது திராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ) 22
ஆ) 24
இ) 28
ஈ) 30
7. தமிழ் வடமொழியின் மகளன்று சொன்னவர்
அ) கால்டுவெல்
ஆ) ஹீராஸ் பாதிரியார்
இ) மாக்ஸ் முல்லர்
ஈ) ரைஸ்டேவிஸ்
8. பல்வேறு புதிய ஒலிகளைக் கொண்டுள்ள திராவிட பழங்குடி மொழி
எது?
அ) கோத்தா
ஆ) தோடா
இ) கொரகா
ஈ) குடகு
9. “தமிழே மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி” – என்றவர்
அ) ஈராஸ் பாதிரியார்
ஆ) மாக்ஸ் முல்லர்
இ) ரைஸ்டேவிஸ்
ஈ) பெர்சிவல்
10. “ஆற்றல் மிக்கதாகவும்
சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எம்மொழியாலும்
விஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை
உள்ளவாறு எடுத்துக்காட்டுவதில் தமிழ்மொழிக்கு ஈடாக எம்மொழியும் இயைந்ததாக இல்லை” – என்றவர்
அ) ஈராஸ் பாதிரியார்
ஆ) மாக்ஸ் முல்லர்
இ) ரைஸ்டேவிஸ்
ஈ) பெர்சிவல்
11. “வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று
இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன” – என்றவர்
அ) ஈராஸ் பாதிரியார்
ஆ) மாக்ஸ் முல்லர்
இ) ரைஸ்டேவிஸ்
ஈ) பெர்சிவல்
12.“இப்போது வழங்கும்
எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழைமையானது” – என்றவர்
அ) ஈராஸ் பாதிரியார்
ஆ) மாக்ஸ் முல்லர்
இ) ரைஸ்டேவிஸ்
ஈ) பெர்சிவல்
13.“இந்தோ – ஆரிய மொழியாகிய இன்றைய சமற்கிருதம், இந்நாட்டில் நுழைவதற்கு முன்னாலேயே திராவிட மொழிகள் வழக்கில் இருந்துள்ளன” என்று கூறிய மொழியியல் அறிஞர்.
அ) தெ.பொ.மீ
ஆ) ச. அகத்தியலிங்கம்
இ) மாலினோவ்ஸ்கி
ஈ) ஃபுளும்பீல்டு
14. திராவிடமொழி, சித்திய மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, பின்னிஷ் மொழி, பாஸ்க் மொழி, ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பண்டு மொழி, மலேசிய பாலினேஷியன் மொழி முதலானவை ………………யைச் சார்ந்தவை.
அ) தனிநிலை
ஆ) உட்பிணைப்பு நிலை
இ) ஒட்டுநிலை
ஈ) இவையனைத்தும்
15. பெங்கோ மொழி பேசும் மக்களை இவ்வாறும் அழைக்கலாம்.
அ) ஒல்லாரி
ஆ) பர்ஜாஸ்
இ) கந்த்
ஈ) ஜானி
16. மாறுபட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்
அ) தமிழ்
ஆ) கோத்தா
இ) தோடா
ஈ) கொரகா
17. இந்தியநாட்டில் இந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும்
திராவிட மொழி எது?
அ) தமிழ்
ஆ) தெலுங்கு
இ) மலையாளம்
ஈ) கன்னடம்
18. திராவிட பழங்குடி மொழிகளில் எம்மொழி அதிகமான மக்களால் பேசப்படுகிறது.
அ) மால்தோ
ஆ) கூவி
இ) கோலாமி
ஈ) கோண்டி
19. பொருந்தாததைக் கண்டறிக.
அ) குருக்
ஆ) மால்தோ
இ) கோலாமி
ஈ) பிராகூய்
20. ‘ஒரொவொன்‘ என்றும் அழைக்கக்கூடிய திராவிட மொழி
அ) குருக்
ஆ) மால்தோ
இ) கதபா
ஈ) பிராகூய்
21. கூயி மொழியை எவ்வாறு அழைப்பர்
அ) ஒரொவொன்
ஆ) கொண்ட தொரா
இ) கோந்த்
ஈ) ஒல்லாரி
22. வெளிநாட்டில் மட்டும் பேசப்படும் திராவிட மொழி எது?
அ) தமிழ்
ஆ) பிராகூய்
இ) தெலுங்கு
ஈ) மால்தோ
23. எம்மொழியை ‘இராஜ்மஹால்‘ என கால்டுவெல் அழைத்தார்.
அ) குருக்
ஆ) மால்தோ
இ) கதபா
ஈ) பிராகூய்
24. கூர்க்கி, கோதகி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் மொழி
எது?
அ) குடகு
ஆ) கூயி
இ) கோலாமி
ஈ) கூவி
25. கோலாமி மக்கள் பற்றிய குறிப்பை முதன்முதலில் வெளியிட்டவர்.
அ) கால்டுவெல்
ஆ) இலட்சுமணாஜி
இ) ஸ்டீபன் ஹிஸ்லாப்
ஈ) பர்ரோ
26. ‘கொண்ட தொரா‘ என்று அழைக்கப்படும் மக்கள் யார்?
அ) கூயி
ஆ) கூபி
இ) கூவி
ஈ) கோயா
27. கொண்டா மக்களை வேறு எவ்வாறு அழைக்கலாம்.
அ) கூயி
ஆ) கூபி
இ) கூவி
ஈ) கோயா
28. ஒரிசாவில் பேசப்படும் ஒல்லாரி மொழி எது?
அ) கதபா
ஆ) கூயி
இ) குரூக்
ஈ) கூவி
29. மஹாராஷ்டிரத்தில் வார்தா, நாக்பூர், சியோனி போன்ற பகுதிகளில்
பேசப்படும் மொழி
அ) கோண்டி
ஆ) கொண்டா
இ) கோயா
ஈ) கோலாமி
30. நாயக்கி மொழி பேசும் மக்களை எவ்வாறு அழைப்பர்
அ) பெங்கோ
ஆ) தடுவெ கோண்ட
இ) கொண்ட தொரா
ஈ) பர்ஜாஸ்
அருமை
பதிலளிநீக்குமொழி பாடத்தீல் தெளிவினை தந்தது .மிக்க நனறி
பதிலளிநீக்குவினாக்கள் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
பதிலளிநீக்குகேள்வி தரமானதாக இருக்கிறது நன்றி
பதிலளிநீக்குகருத்துரையிடுக