PG TRB - தமிழ் - தேர்வு 8
(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)
1.இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில்
இறுதியாக அமையாத குற்றியலுகர எழுத்துகள் எது?
அ) சு, டு, கு
ஆ) சு, டு,
று
இ) சு, டு, து
ஈ) சு, டு, பு
2.குற்றியலிகரம் எத்தனை
இடங்களில் மட்டும் வரும்.
அ) 2
ஆ) 6
இ) 36
ஈ) 42
3.சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த
அறிஞன், மறம் பாட வந்த மறவன்
என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.
அ) வாணிதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) வ.ரா
ஈ) பெரியார்
4.தமிழ் மொழியை எழுத
இருவகை (தமிழ் எழுத்து, வட்டெழுத்து) எழுத்துகள் வழக்கிலிருந்தன
என்று இவற்றுள் எது குறிப்பிடுகிறது?
அ) சின்னமனூர் செப்பேடு
ஆ) ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு
இ) குடுமியான்மலை கல்வெட்டு
ஈ) அரச்சலூர்
கல்வெட்டு
5.கடைச்சங்க காலத்தில்
தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் என்னவென்று அழைக்கப்பட்டன.
அ) வட்டெழுத்துகள்
ஆ) கண்ணெழுத்துகள்
இ) கிரந்த எழுத்துகள்
ஈ) தமிழ் எழுத்துகள்
6.மிகப் பழைய தமிழ்
எழுத்து எது ?
அ) வட்டெழுத்து
ஆ) கண்ணெழுத்து
இ) கிரந்த எழுத்து
ஈ) தமிழ் எழுத்து
7.சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய
பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில்
எந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
அ) வட்டெழுத்துகள்
ஆ) கண்ணெழுத்துகள்
இ) கிரந்த எழுத்துகள்
ஈ) தமிழ் எழுத்துகள்
8.செந்தமிழ் அந்தணர்
என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) தேவநேயப்பாவாணர்
ஆ) பரிதிமாற்காலைஞர்
இ) இரா.இளங்குமரனார்
ஈ) க.த. திருநாவுக்கரசு
9.திருச்சிக்கு அருகில்
அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர்.
அ) இரா. இளங்குமரனார்
ஆ) க.த.திருநாவுக்கரசு
இ) மறைமலையடிகள்
ஈ) பரிதிமாற்கலைஞர்
10.பொருத்துக.
எழுத்துகள் பிறப்பிடம்
அ) உயிர் எழுத்து - 1. மார்பு
ஆ) வல்லின எழுத்து - 2. கழுத்து
இ) மெல்லின எழுத்து - 3. தலை
ஈ) ஆய்த எழுத்து - 4. மூக்கு
அ) அ-2, ஆ-3, இ-4, ஈ-1
ஆ) அ-2, ஆ-1, இ-4, ஈ-3
இ) அ-3, ஆ-2, இ-4, ஈ-1
ஈ) அ-3, ஆ-1, இ-4, ஈ-2
11.நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப்
பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) த், ந்
12.நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப்
பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) த், ந்
13.நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப்
பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) த், ந்
14.மேல்வாய்ப் பல்லின்
அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) த், ந்
15.கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும்
இணைவதால் பிறக்கும் எழுத்து . . . . . . .
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
16.நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப்
பொருந்துவதால் பிறக்கும் எழுத்து . . . . . . .
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
17.மேல்வாயை நாக்கின்
நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள்
அ) ல், ள்
ஆ) ர், ழ்
இ) ற், ன்
ஈ) த், ந்
18.மேல்வாய்ப் பல்லின்
அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதாலும் தடவுதலாலும் பிறக்கும் எழுத்துகள்
அ) ல், ள்
ஆ) ர், ழ்
இ) ற், ன்
ஈ) த், ந்
19.இந்திய நாடு மொழிகளின்
சாட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர்
அ) ஹீராஸ் பாதிரியார்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) ச. அகத்தியலிங்கம்
ஈ) தெ.பொ.மீ
20.தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் உருவானது
என்று கூறும் மொழி ஆராய்ச்சியாளர்
அ) ஹீராஸ் பாதிரியார்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) கால்டுவெல்
ஈ) கமில்சுவலபில்
நன்று
பதிலளிநீக்குகருத்துரையிடுக